சிவில் பணிகள்

பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரி கட்டளை படையின் (முல்லைத்தீவு) 2 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 பெப்ரவரி 10 அன்று முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.


புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலிருந்து மன்னாரில் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சிவலிங்கத்துடனான யாத்திரையின் பக்தர்களுக்கு 11 வது (தொ) கஜபா படையணி படையினர் 2026 பெப்ரவரி 12 அன்று கிளிநொச்சி, அக்கராயனில் உதவி வழங்கினர்.


78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ சிவில் நிர்வாக பணிப்பகம் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி பேலியகொடையில் இரத்த தான நிகழ்ச்சியை நடாத்தியது.


562 மற்றும் 563 வது காலாட் பிரிகேட் படையினர், ஸ்பிரிட் ஒப் கிவிங் அமைப்புடன் இணைந்து தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடை வழங்கும் திட்டம் 2026 பெப்ரவரி 05, அன்று வவுனியா ராஜேந்திரகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் வவுனியா மகாகச்சகுடிய அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் முன்னெடுத்தனர்.


கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் இரத்தமாற்ற மையத்தில், கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வட மாகாண மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஒத்துழைப்புடன், 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2026 பெப்ரவரி 04 அன்று இரத்த தான நிகழ்ச்சியினை நடத்தினர்.


78 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்த தேவையை ஆதரிப்பதற்காக 521 வது காலாட் பிரிகேட் 2026 பெப்ரவரி 06 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கமைய, 52 வது காலாட் படைப்பிரிவின் அறிவுறுத்தலில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் 2026 பெப்ரவரி 03 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக 51வது காலாட் படைப்பிரிவின் படையினரால் 2026 பெப்ரவரி 04 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, 51வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.


அபிமன்சல 2 நல விடுதியின் தளபதி பிரிகேடியர் ஜீ.ஜீ.ஆர். மத்துகொட யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல 2 நல விடுதியின் பல்நோக்கு மண்டபத்தில் 2026 ஜனவரி 18 ஆம் திகதி ஒரு தர்ம பிரசங்கம் நடாத்தப்பட்டது.


யாழ்ப்பாணம், அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் கல்லூரியின் மாணவர்களுக்காக 51 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 5 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் 2026 ஜனவரி 30 ஆம் திகதி இரண்டு மாடி கட்டிடத்தை நிர்மாணித்து ஒப்படைத்தனர்.