
வளர்ந்து வரும் மனித-யானை மோதலைத் தணிக்கும் முயற்சியாக, கிழக்கு பாதுகாப்புப் படையினர் 7 வது இலங்கை பீரங்கி படையணி, 12 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து 2025 ஜூன் 19 ஆம் திகதி மிவிதபுரத்திலிருந்து நுவரகலைக்கு 26 காட்டு யானைகளை விரட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.