சிவில் பணிகள்

23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால், கோமாதுரை வடக்கில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.


51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதல் மற்றும் 513 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி காரைநகரில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கட்டிய புதிய வீட்டைக் கையளித்தனர்.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இலங்கை கண் தான சங்கத்துடன் இணைந்து 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி ஒரு சிறப்பு கண் மருத்துவ முகாமை நடாத்தினர். பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 364 வறிய பொதுமக்களுக்கு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கினர்.


இலங்கை இராணுவத்தினர், 2025 செப்டம்பர் 27 ஆம் திகதி கருகம்பனை சனசமூக நிலையத்தில் தேவையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த எண்பது பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை விநியோகித்தனர்.


பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் இரத்மலானை விழிப்புலனற்றோர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்படி, இலங்கை இராணுவம் விழிப்புலனற்றோர் பாடசாலை உறுப்பினர்களுக்கு 2025 செப்டம்பர் 26 முதல் 28 வரை யாழ்ப்பாணப் பகுதிக்கு சிறப்பு விஜயம் மேற்கொண்டபோது அவர்களுக்கு போக்குவரத்து, தங்குமிட வசதிகள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கியது.


உலக தூய்மை தினம் 2025 நிகழ்ச்சி 2025 செப்டம்பர் 25 அன்று 23வது காலாட் படைப்பிரிவு மற்றும் புனானி சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.


கொஸ்குலன ஆரம்ப பாடசாலை நூலகத்திற்கு 2025 செப்டம்பர் 23 அன்று இராணுவத்தினர் சுமார் 470 வாசிப்புப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.


221 வது காலாட் பிரிகேட்டின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கஜபா படையணியினரால் 2025 செப்டம்பர் 17, அன்று திருகோணமலை தி/சங்கமய ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.


15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் ஆதரவுடன், 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி மொல்லிப்பொத்தானை அக்ரபோதி விகாரையில் இரத்த தான திட்டத்தை நடாத்தினர்.