சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக, 'ராண்டியா' நீர் சுத்திகரிப்பு திட்டம் 2025 மே 30ஆம் திகதி நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கோஹோம்பன் குளம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.