
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி பார்வையிடும் தியதலாவை “பொக்ஸ் ஹில்” பிரதேசத்தில் “தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தூய்மையாக்கும் பணி 2025 மே 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
தேசத்தின் பாதுகாவலர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி பார்வையிடும் தியதலாவை “பொக்ஸ் ஹில்” பிரதேசத்தில் “தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தூய்மையாக்கும் பணி 2025 மே 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 221 வது காலாட் பிரிகேட்டின் 20 வது கஜபா படையணியினால் 2025 மே 26 ஆம் திகதி அதன் வளாகத்தில் இரத்த தான வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலகத்துடன் இணைந்து, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, திருகோணமலை திஸ்ஸபுரம் அக்போ ரஜமஹா விஹாரையில் 2025 மே 27 அன்று மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கியது.
குண்டசாலை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தேசிய பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2024 மே 23 ஆம் திகதி நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது காலாட் பிரிகேட் படையினர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து, ‘தூய இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மாந்தோட்டம் கட்டுக்கரைகுளத்தை இணைக்கும் நீர்ப்பாசன கால்வாயினை சுத்தம் செய்யும் திட்டத்தை 2025 மே 25 ஆம் திகதி மேற்கொண்டனர்.
9 வது கஜபா படையணியின் படையினர் 2025 மே 26 ஆம் திகதி 9 வது கஜபா படையணியில் நன்கொடை திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது கஜபா படையணி, உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பௌத்த காருண்ய நிவாரண “ட்சு சீ” அறக்கட்டளையால் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் 12 வது காலாட் படை பிரிவின் படையினர் பங்கேற்றனர்.
“தூய இலங்கை” திட்டத்திற்கமைய இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரஜைகளின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது. இவ் வீடு 58வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களால் 2025 ஏப்ரல் 02 அன்று பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களின் நல்வாழ்வை முன்னிலை படுத்தும் நிமித்தம் "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 232 வது காலாட் பிரிகேட்டின் 4வது கெமுனு ஹேவா படையணியினரால் 2025 ஏப்ரல் 5 அன்று உன்னச்சிவிய பகுதியில் இரத்த தான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இத் திட்டத்தின் நோக்கம் அப்பகுதியின் இரத்த பற்றா குறையை நிவர்த்தி செய்வதாகும்.