சிவில் பணிகள்

குருநாகல் பொத்துஹெர வடகட முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 2025 ஜூலை 19, அன்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.


"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு இணங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழுள்ள படையலகுகளினால் 2025 ஜூலை 04 ஆம் திகதி சமூகம் சார்ந்த தொடர்ச்சியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


54 வது காலாட்படை படைப்பிரிவின் படையினர், "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 2025 ஜூலை 09 அன்று 541, 542 மற்றும் 543 வது காலாட் பிரிகேடின் கீழ் உள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு திட்டத்தை நடத்தினர்.


51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மாதகலில் தேவையுடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டைக் நிர்மாணித்து பயனாளியிடம் 2025 ஜூலை 07 அன்று கையளித்தனர்.


செல்ல கதிர்காமத்தில் 2025 ஜூலை 10 ஆம் திகதி ஏழை குடும்பம் ஒன்றிற்கு ஒரு புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டது.


6 வது இலங்கை கவச வாகன படையணியினால் 2025 ஜூலை 08 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் இரத்த தான நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


2 வது இயந்திரவியல் காலாட் படையணி, 2025 ஜூன் 30 ஆம் திகதி செட்டிகுளம் கிறிஸ்த்துவகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களை வழங்கியது.


9 வது விஜயபாகு காலாட் படையணியினால் சிறிமங்களபுரத்தில் உள்ள தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு 2025 ஜூலை 04 அன்று வீட்டின் சாவி பயனாளியிடம் வழங்கப்பட்டது.


2025 ஜூலை 05 ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.


சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவெரட்டிய மணிகம பகுதியில் சுற்றித் திரிந்த பாத்தியா என்ற காட்டு யானை, சமீபத்தில் நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.