கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீபீபீ குலதிலக என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணியினரால் 100 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
சிவில் பணிகள்
கிழக்கு பாதுகாப்புப் படையினரால் திம்புலாகல நிதன்வல ஆரம்ப பாடசாலை மற்றும் தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதன்வல ஆரம்ப பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் காலாட் படையணி விருந்து மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 29 அன்று சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
இனோஷன் சுரன் இலங்கை இராணுவத்தால் கௌரவிப்பு
2025-10-27
பிரான்சில் வசிக்கும் இலங்கையரான திரு. இனோஷன் சுரன், ஜெர்மனி, துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளை உள்ளடக்கிய பாரிஸிலிருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவுசெய்தார். 2025 செப்டம்பர் 1 அன்று தனது பயணத்தைத் ஆரம்பித்த அவர் 2025 ஒக்டோபர் 23 அன்று யாழ்ப்பாணத்தை வெற்றிகரமாக வந்தடைந்தார்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கல் திட்டம், 2025 ஒக்டோபர் 24 அன்று அம் / பானம மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
2025 ஒக்டோபர் 19ஆம் திகதி, 7வது பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் சேருநுவர 215 எப் நலன்புரி சமூக நிலையத்தின் கிராம மக்களுக்காக வெடிபொருள் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சேருநுவர கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளரின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால், கோமாதுரை வடக்கில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.
211 காலாட் பிரிகேட், கஜபாபுர, மு/பரணகமவெவ பாடசாலைக்கு ஒரு புதிய சமையலரையை கட்டியது.
51 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதல் மற்றும் 513 வது காலாட் பிரிகேடின் மேற்பார்வையின் கீழ், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி காரைநகரில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கட்டிய புதிய வீட்டைக் கையளித்தனர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இலங்கை கண் தான சங்கத்துடன் இணைந்து 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி ஒரு சிறப்பு கண் மருத்துவ முகாமை நடாத்தினர். பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 364 வறிய பொதுமக்களுக்கு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கினர்.