
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு ஆதரவாக, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜூன் 15 ஆம் திகதி சிப்பியாறு புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
தேசத்தின் பாதுகாவலர்
"தூய இலங்கை" தேசிய திட்டத்திற்கு ஆதரவாக, 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் 2025 ஜூன் 15 ஆம் திகதி சிப்பியாறு புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியினால் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய இரசாயன கசிவை நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு இரசாயன படை அனுப்பிவைக்கப்பட்டது. இரசாயன ஆயுத மரபுகளுக்கான தேசிய அதிகார சபையின் (NACWC) தொழில்நுட்ப ஆதரவுடன், 2025 ஜூன் 16 அன்று கொழும்பு தீயணைப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 14 ம் திகதி முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
513 வது காலாட் பிரிகேட் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து 2025 ஜூன் 09 அன்று கருகம்பனை கலாசார மண்டபத்தில் இரத்த தான திட்டத்தை முன்னெடுத்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 211வது காலாட் பிரிகேட், 9வது கஜபா படையணி மற்றும் 5வது (தொ) கஜபா படையணி படையினர், 2025 ஜூன் 07 அன்று பதவிய மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். கொழும்பு ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, அவர்களின் 46 வது வருடாந்த இரத்த தான நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை முன்னெடுத்தனர்.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீ.எம். டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஈரற்பெரியகுளம் ஸ்ரீ சைலபிம்பாராமய விகாரையில் 2025 ஜூன் 08 ஆம் திகதி "தூய இலங்கை" திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சிவில் பொறுப்பு மற்றும் மனிதாபிமான சேவையின் பாராட்டத்தக்க விடயமாக 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி 2025 ஜூன் 09 ஆம் திகதி இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
593 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2025 ஜூன் 12 ஆம் திகதி சுதந்திபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, 6 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் முல்லைத்தீவு சுதந்திபுரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 150 தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை முதலாம் படையின் படையினர் 2025 ஜூன் 11 ஆம் திகதி கிளிநொச்சி, திருவள்ளூர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி லோலுவகொட ஏழைக் குடும்பத்திற்கான ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணியை வெற்றிகரமாக முடித்தனர்.