சிவில் பணிகள்

2026 ஜனவரி 03 ஆம் திகதி திம்புலாகலை மனம்பிட்டியவில் உள்ள மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் மனம்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் பிள்ளைகளுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.


51வது காலாட் படைப்பிரிவு சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2025 டிசம்பர் 25, அன்று கோப்பாய் இருபாலையிலுள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிறப்பு நத்தார் தான நிகழ்ச்சியை நடத்தியது.


மட்டக்களப்பு சிவில் சமூகக் குழு 2025 டிசம்பர் 28 ஆம் திகதி புனானி சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவை நடாத்தியது. 12 மாத டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 200 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது.


56வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2025 டிசம்பர் 24, அன்று நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 56 மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 45 மாணவர்களும், கொக்வெலிய ஆரம்ப பாடசாலையின் 11 மாணவர்களும் பயன்பெற்றனர்.


கலுகலே விஜய பராக்கிரம கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 27, அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மதுபரா சிங்கள மகா வித்தியாலயம், கட்டியடப்பன ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், தம்பனேகுளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை மற்றும் பன்னிவெட்டுவான் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 22, அன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


543 வது காலாட் பிரிகேட் படையினர், 2025 டிசம்பர் 22 ஆம் திகதி மன்னார் கலாசார மண்டபத்தில் 142 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.


பொறியியல் சேவைகள் படையணியின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2025 டிசம்பர் 24 ஆம் திகதி படையணி தலைமையகத்தில், அதன் படையினர் இரத்த தான முகாமை நடாத்தினர்.


கண்டி மாவட்ட சாரணர் கிளை, 17 வது கம்போரியுடன் இணைந்து, 2025 நவம்பர் 16 ஆம் திகதி போகம்பரா மைதானத்தில் குருளை சாரணர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.


நாரம்மல, தெமட்டகஹவெலவில் வசிக்கும் ஓர் ஏழை குடும்பத்திற்கு உபகரணங்களுடன் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று சம்பிரதாயத்திற்கமைய கையளிக்கப்பட்டது.