16th August 2025
‘படையினரின் உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை முயற்சிகளைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பட்டறை, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை இராணுவத் தலைமையகத்தின் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல பணிப்பகத்தின் மனநல நிபுணர்கள் நடத்தினர், இதில் பணிப்பாளர் பிரிகேடியர் வைத்தியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ, கேணல் எம்கேஏடி சந்திரமால் மற்றும் கெப்டன் கேபீகே. என்டனி ஆகியோர் அடங்குவர்.
இந்தப் பட்டறையில் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்கேற்றனர்.