தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 12வது குழு 2026 மார்ச் 13 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.
தேசத்தின் பாதுகாவலர்
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 12வது குழு 2026 மார்ச் 13 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் இரண்டு நாள் தலைமைத்துவ மேம்பாட்டு பட்டறை 2026 மார்ச் 06 மற்றும் 07 ம் திகதிகளில் சீன-லங்கா நட்புறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் தலைமைத்துவ தரநிலைகள், தொழில்முறை பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென் சூடான் போரில் ஐ.நா அமைதி காக்கும் பணியின் இலங்கை இராணுவ வைத்திய படை நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றிய 11வது குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 41 சிப்பாய்கள் உள்ளடங்குவர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 11 கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார். புனித ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு நோன்பதனை குறிக்கும் வகையில் இந்த விழா அமையப்பட்டது.
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.பீ. ஜயம்பதி யூஎஸ்பீ அவர்கள் 2026 மார்ச் 11ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை பொறியியல் படையணிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி – 2026, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 2026 மார்ச் 08 ஆம் திகதி நடைபெற்றது. நிறைவு விழாவில் இராணுவத் பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கம்புருபிட்டிய 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் மாத்தறை 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 2026 மார்ச் 06 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் வை.எச்.பீ. ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2026 மார்ச் 09 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னம் மற்றும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ச்சியாக 59 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (2026 மார்ச் 08) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.
இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1999 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இராணுவ கீதத்தின் இசையமைப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக இலங்கை இராணுவம், 2026 மார்ச் 6 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.