உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 நவம்பர் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
உற்பத்தித்திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டு பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025 நவம்பர் 25 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்திய மற்றும் இலங்கை படையினருக்கிடையிலான பரஸ்பர கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளைச் சேர்ந்த 120 பேர் கொண்ட குழுவினர் 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. 2025 நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு நாள் விஜயம், இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், கலாசார புரிதலை ஆழப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் என்எஸ்எஸ் டயஸ் ஆர்எஸ்பீ ஆகியோர், 2025 நவம்பர் 26, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
2025 நவம்பர் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சமீபத்திய ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவக் குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமது மஹ்பூபி பூலாதி அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் கூட்டுறவு இராணுவ உறவை மேலும் வலுப்படுத்த 11வது இராணுவ-இராணுவ பணிநிலை கலந்துரையாடல் 2025 நவம்பர் 18 முதல் 20 வரை இந்தியாவின் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி கல்வியற்கல்லூரியில் நடாத்தப்பட்டது.
மாவனெல்ல கணதென்னவில் 2025 நவம்பர் 22 அன்று பாறைகள் நிறைந்த மண் மேடு இடிந்து விழுந்ததில் ஒரு கடை மற்றும் அருகிலுள்ள வீடு இடிந்து விழுந்ததில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர்.
இலங்கை-இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சியின் 11வது மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவக் குழு, இந்தியாவின் கர்நாடக பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் 2025 நவம்பர் 10 முதல் 22 வரை நடத்தப்பட்ட பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் 2025 நவம்பர் 22 அன்று நாடு திரும்பியது.
விஜயபாகு காலாட்படை கருத்தரங்கு – 2025, போயகனை விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 22 அன்று நடைபெற்றது.
சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக உயர்தர பரீட்சார்த்திகள் தாமதமின்றி தங்கள் பரீட்சை நிலையங்களை அடைவதற்காக, இலங்கை இராணுவம் அவர்களுக்கு முக்கியமான போக்குவரத்து ஆதரவை வழங்கியது.