செய்தி சிறப்பம்சங்கள்

'ஷேக் ஹேண்ட்' பயிற்சியின் இரண்டாம் பதிப்பு, பாகிஸ்தான் தர்பேலாவில் உள்ள விசேட நடவடிக்கைகள் பாடசாலையில் 2026 ஏப்ரல் 26 முதல் 10 மே 2026 வரை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.


லெப்டினன் ஜெனரல் கிளெப் வி. எரெமின் தலைமையிலான, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் இராணுவ வான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பிரதிநிதிகள் குழு ஒன்று 2026 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தது.


மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவித்தான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


ஜப்பானின் கசுமிகௌராவில் 2026 ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற பார்வையற்றோருக்கான மரதன் போட்டியில் 12 வது இடத்தைப் பிடித்த கஜபா படையணியின் சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸவை இராணுவ தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 23 அன்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார்.


இலங்கை பீரங்கிப் படையணி தனது 138வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 ஏப்ரல் 20 அன்று படையணி தலைமையகத்தில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.


யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையத்தின் வழிகாட்டுதல் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.


ஜெர்மன் விமானப்படையின் லெப்டினன் கேணல் பிராங்க் விர்த்ஸ் மற்றும் கெப்டன் நில்ஸ் நார்விக் ஆகியோர், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.


சம்பிரதாய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், சம்பிரதாய சிற்றுண்டிகள் மற்றும் சுமூகமான ஒன்றுகூடலுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ். கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.என்.டி.பி. வீரக்கோன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய சந்திப்பின்போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான சேவைகளை உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட இராணுவ மின்-வலைதளத்தை (E-Portal) இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 10 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.