செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


2025 நவம்பர் 26 அன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, 24வது காலாட் படைப்பிரிவின் படையினர் நிவாரணப் பணிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கினர். அதன்படி, 241வது காலாட் பிரிகேட்டின் கீழ் உள்ள 18வது விஜயபாகு காலாட் படையணி குழு, கனமழை காரணமாக சம்மாந்துறை, கல்லரிச்செல் பகுதியில் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டது.


இந்திய இராணுவ பரா கள வைத்திய குழுவை சேர்ந்த 73 மருத்துவப் பணியாளர்கள், முழுமையாகச் செயற்படும் கள மருத்துவமனையுடன் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.


தித்வா சூறாவளிக்குப் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ. 500,000.00 பெறமதியான பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் 2025 நவம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும், இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இதில் இராணுவம், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலவும் சீரற்ற வானிலை நிலைமையை மதிப்பிடுவதற்காக களத் தளபதிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை ஏற்படுத்தி, நடந்து வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் தேவையான வழிகாட்டுதல்களை இன்று மாலை இராணுவத் தலைமையகத்தில் வழங்கினார்.


வெள்ளம்பிட்டிய ராஜசிங்க கல்லூரியில் நிறுவப்பட்ட அவசர பாதுகாப்பு நிலையத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 29 ஆம் திகதி விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண பணிகளை மதிப்பாய்வு செய்தார்.


கெமுனு ஹேவா படையணியின் மறைந்த பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ (ஓய்வு) அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2025 நவம்பர் 27 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.


2025 நவம்பர் 27 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணவும், தொடர்ந்து நடைபெறும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்யவும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகளுக்கு அறிவுறுத்தினார்.