செய்தி சிறப்பம்சங்கள்

இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் எ.எம்.சீ.பீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பீ. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.கே.ஆர்.என் சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 29, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பணிநிலை சார்ஜன் கே.எம்.சீ.எஸ். குலசேகர யூஎஸ்பீ அவர்கள் அணிநடை பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 134 இல் முதலிடத்தைப் பெற்றார்.


அண்மையில், மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எஸ். ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 டிசம்பர் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடனான மரியாதைக்குறிய சந்திப்பின் போது அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.


நத்தார் பண்டிகை மற்றும் நல்லெண்ண உணர்வினை உணர்த்தும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 23 அன்று கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதி, ராகம ரணவிரு சேவன மற்றும் அத்திட்டிய மிகிந்து செத் மெதுர நலவிடுதி ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.


2025 ஆம் ஆண்டுக்கான இராணுவப் படையணிகளுக்கு இடையிலான போர் துப்பாக்கி சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் சான்றிதழ் மற்றும் கிண்ணம் வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 22 ஆம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தியதலாவ இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து நிலையினருக்குமான விடுமுறை விடுதியை 2025 டிசம்பர் 22, அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.


மேஜர் முகமது அப்துல் மன்னன் தலைமையிலான 47 பேர் கொண்ட பாகிஸ்தான் இராணுவ மீட்பு குழு மற்றும் நிவாரணப் படை, தித்வா சூறாவளி நிவாரணப் பணிகளின் போது சிறப்பான சேவை வழங்கியதற்காக இலங்கை இராணுவத்தால் முறையாகப் பாராட்டப்பட்டது.


இராணுவத் தளபதி இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் மதிப்புமிக்க சுவரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 20 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.