செய்தி சிறப்பம்சங்கள்

மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 36 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூன் 20 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


சேவையிலுள்ள பணியாளர்கள், ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வீரமரணமடைந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு நலத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.


இலங்கை இராணுவம், 2025 ஜூன் 20 ஆம் திகதி இராணுவத்தின் பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தது.


இலங்கைக்கான மாலைத்தீவு மற்றும் துருக்கி குடியரசின் தூதர் அதிமேதகு செமி லுட்பு துர்குட் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூன் 17 ஆம் திகதி சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.army.lk நாட்டில் அடிக்கடி பார்வையிடப்படும் பாதுகாப்பு துறை தளங்களில் ஒன்றாகும். இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இராணுவத்தின் டிஜிட்டல் உருமாற்ற பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் 2025 ஜூன் 18 முதல் பார்வையாளர்களுக்கு நேரலையில் இருக்கும்.


2025 ஜூன் 16 ஆம் திகதி நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் நிலை உயர்வு பெற்ற புதிய மேஜர் ஜெனரல்களுக்கான அதிகாரச் சின்னங்களை சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.


முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை பொரளை பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 13 ஆம் திகதி 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 13 அன்று தனது 91 வயதில் காலமானார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 12 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி, 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.