இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 15, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவர், போர்வீரர்கள் நினைவுத் தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஹெரலியாவல முகாமின் நுழைவாயிலில் அவருக்கு சம்பிரதாயபூர்வமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பின்னர், படைத் தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகளால் வழங்கப்பட்ட விளக்கக் கூட்டத்தில் தளபதி கலந்து கொண்டார். பின்னர் அனைத்து கட்டளை அதிகாரிகள், அனைத்து பணிநிலை அதிகாரிகளுக்கு நேரில் மற்றும் மெய்நிகர் முறையில் உரையாற்றினார்.

பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.