செய்தி சிறப்பம்சங்கள்

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 20 ஆம் திகதி குக்குலேகங்க லயா ஓய்வு விடுதிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் இராணுவ முய்தாய் போட்டியில் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று, சர்வதேச அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தனர். உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு இராணுவத்தினருக்கு எதிராகப் போட்டியிட்டு, போட்டி முழுவதும் திறமை, ஒழுக்கம் மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தினர்.


இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி மத்தேகொடை பொறியியல் இல்லத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் ரணவிரு எப்பரல் ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி யக்கலை ரணவிரு எப்பரல் தொழிற்சாலைக்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.


ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஜூலை 30 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. ஊவா மாகாணத்தில் வசிக்கும் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.


இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜூலை 17 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 16 அன்று தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிங்கர் ஸ்விப்ட் 2025’ ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


இராணுவத் தலைமையகத்தில் 2025 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 'இராணுவத்திலிருந்து சிவில்' வாழ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் வலுவூட்டல் திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.


2025 ஜூலை 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கான இராணுவத்திலிருந்து சிவில் வாழ்வுக்கு வலுவூட்டல் திட்டத்தின் ஆரம்ப விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு போர்வீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.


இராணுவ சேவையில் உள்ள பணியாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்துடன், அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2025 ஜூலை 09 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் ஒரு நலன்புரி திட்டம் நடத்தப்பட்டது.