
இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.
தேசத்தின் பாதுகாவலர்
இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 206 அதிகாரவணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன், பயிற்சி பணிப்பகத்தினால் 2025 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஒழுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
76 வது இராணுவ தின கொண்டாட்டத்திற்கு இணங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படையினர் கொஸ்கம அரச மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்த்தனர். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி மருத்துவமனை அதிகாரிகளிடம் உபகரணங்களை ஒப்படைத்தார்.
2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற 76 வது இராணுவ தின கொண்டாட்டங்களுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களினால் ஐந்து பிரிகேடியர்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டது.
கம்புருபிட்டிய, அபிமன்சல II நல விடுதியில் வசிக்கும் கஜபா படையணியின் காலாட் படை சிப்பாய் ஆர்.டபிள்யூ.வீ. பியதிஸ்ஸ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தனது குறிப்பிடத்தக்க சாதணையை நிலைநாட்டி செரண்டிப் உலக சாதனை படைத்துள்ளார்.
2025-10-10
76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, நாட்டைப் பாதுகாப்பதற்கான படையினரின் கடமையிலும் தொழில்முறை மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறுகிறார். மேலும், நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார பாரம்பரியத்தை நிலைநாட்டுவதிலும், சமரச முயற்சிகளை வலுப்படுத்துவதிலும் இராணுவத்தின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார்.
இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் ஏஏடிபீ குலதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்றதுடன் 2025 ஒக்டோபர் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ சேவையினை நிறைவு செய்து, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவத் தலைமையகத்தின் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.