மறைந்த பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை

இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 02 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.

இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர், தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பூதவுடலை தாங்கிய பேழை பீரங்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை செலுத்தினர்.

இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகள் குழு பூதவுடலை தாங்கிய பேழையை முறையாக பெற்றுக்கொண்டதுடன், இராணுவ அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்களுடன் பேழைக்கு பின்னால் அணிவகுத்து சென்றனர்.

இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I கூடியிருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ மரியாதையான அடையாள துப்பாக்கி மரியாதையை படையினர் செலுத்தினர்.

புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை சிங்க படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் மறைந்த பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பெற்ற அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை சம்பிரதாயங்களுக்கு அமைய துக்கத்திலிருந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது,. மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துயரப்படுவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி I பின்வருமாறு: