5th January 2026
இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கான இராணுவத்தின் இறுதி மரியாதை 2026 ஜனவரி 04 ஆம் திகதி களனி, சேபால பொது மயானத்தில் நடைபெற்றது.
மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறைந்த பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தனது நீண்ட மற்றும் கௌரவமான இராணுவ வாழ்க்கையில் ஆற்றிய சிறப்புமிக்க சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக இலங்கை இராணுவத்தின் உயர் மரியாதை மற்றும் நன்றியை இந்த இறுதி மரியாதை நிகழ்வு பிரதிபலித்தது.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி I பின்வருமாறு: