2026 மே 17 ஆம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கூரையின் மீது விழுந்து வைத்தியசாலையின் நடைபாதையைச் சேதப்படுத்திய மரக்கிளையை 4 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அகற்றியுள்ளனர்.
தேசத்தின் பாதுகாவலர்
2026 மே 17 ஆம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கூரையின் மீது விழுந்து வைத்தியசாலையின் நடைபாதையைச் சேதப்படுத்திய மரக்கிளையை 4 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அகற்றியுள்ளனர்.
பசுமைப் போக்குவரத்து மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, 23வது காலாட் படைப்பிரிவு 2026 மே 13 ஆம் திகதி மின்சார வாகன மின்னேற்றும் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தது.
2026 மே 09 திகதி அதிகாலை வேளையில் யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கு 512 வது காலாட் பிரிகேட் படையினர், 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மற்றும் 14 வது கஜபா படையணி படையினர் ஆகியவற்றின் படைவீரர்கள் உதவினர்.
4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் திருகோணமலை, கின்னியாவில், இலங்கை கவச வாகன படையணி சிவில் பணியாளரான திரு. ஏ.கே. தம்யித் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
திருகோணமலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, 223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.டி.ஐ. குணவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி முதூர் கலாசார மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இத்திட்டம் திருகோணமலை இரத்த வங்கியின் மருத்துவ பணியாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
எயர்மொபைல் பிரிகேடின் 32வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி சாலியபுர அரச சாந்தி முதியோர் இல்லத்தில் 260 முதியோர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தினர்.
2026-04-23
பதுளை போதனா வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்று சேவையின் வேண்டுகோளுக்கிங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 2026 ஏப்ரல் 22 அன்று தியத்தலாவ இராணுவ தள வைத்தியசாலையில் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய படைப்பிரிவின் படையினர் 2026 ஏப்ரல் 20 ஆம் திகதி புனானி பஞ்ச மகா விகாரையில், புனானியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.
2026 வசந்தகால மலர்க் கண்காட்சிப் போட்டி நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் அவர்களின் தலைமையில், 2026 ஏப்ரல் 17 முதல் 18 வரை நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நடைபெற்றது.
2026-04-17
6 வது (உதவிப்படை) இலங்கை கவச வாகன படையணியின் படையினர், திருகோணமலை பொது மருத்துவமனையின் இரத்தமாற்றுப் பிரிவுடன் இணைந்து 2026 மார்ச் 28 ஆம் திகதி இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.