சிவில் பணிகள்

யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியின் வேண்டுகோளின்படி, யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாண தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இரத்த தான நிகழ்ச்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


3வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படையினர், நாமல்வெவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடைத் திட்டம் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றை 2026 மார்ச் 04 ஆம் திகதி பொலன்னறுவை பாடசாலை வளாகத்தில் நடாத்தினர்.


“தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர், நானாட்டான் சுகாதார அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து, 2026 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பல் மருத்துவம் மற்றும் தொற்றா நோய் மருத்துவம் போன்ற மருத்துவ முகாமை நடாத்தினர்.


கொழும்பு மகளிர் அமைப்பு, சுபமீ ஊடகங்கத்துடன் இணைந்து, பதவியேற்ற வண. திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரின் 59 வது பிறந்தநாளை முன்னிட்டு 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனயத்தில் ‘ஜன சுவ யாத்திரை’ என்ற தலைப்பில் ஒரு சமூக நலத் திட்டம் நடாத்தப்பட்டது.


55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீசஎஸ்ச அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.எம்.ஆர். கந்தேகும்புர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் 22 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் சமூக நலத்திட்டம் நடாத்தப்பட்டது.


நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து, வவுனியாவில் உள்ள 137 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய குழந்தை பராமரிப்புப் பொருட்களை வழங்கும் நலன்புரி திட்டத்தை 2026 பெப்ரவரி 13 அன்று காமினி மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.


முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முல்லைத்தீவு பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய மகப்பேறு பொருட்களை 2026 பெப்ரவரி 14 அன்று வழங்கினர்.


சுப்ரீம் கெயா ஜன சுவ யாத்ரா சமூக நலத் திட்டத்தின் கீழ் ஒரு கண் சிகிச்சை மற்றும் சுகாதார மருத்துவ முகாம் 2026 பெப்ரவரி 14 அன்று 61 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள ஸ்ரீ வர்தனாராமய விகாரையில் நடத்தப்பட்டது.


54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினருடன் இணைந்து 2026 பெப்ரவரி 15 அன்று மன்னாரில் உள்ள மறைமாவட்ட பொது மக்கள் மன்ற விரிவுரை மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி 162 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளை வழங்கினர்.


பொறியியல் சேவைகள் படையணியின் அதிகாரி கட்டளை படையின் (முல்லைத்தீவு) 2 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 பெப்ரவரி 10 அன்று முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.