கண்டி மாவட்ட சாரணர் கிளை, 17 வது கம்போரியுடன் இணைந்து, 2025 நவம்பர் 16 ஆம் திகதி போகம்பரா மைதானத்தில் குருளை சாரணர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தேசத்தின் பாதுகாவலர்
கண்டி மாவட்ட சாரணர் கிளை, 17 வது கம்போரியுடன் இணைந்து, 2025 நவம்பர் 16 ஆம் திகதி போகம்பரா மைதானத்தில் குருளை சாரணர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.
நாரம்மல, தெமட்டகஹவெலவில் வசிக்கும் ஓர் ஏழை குடும்பத்திற்கு உபகரணங்களுடன் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று சம்பிரதாயத்திற்கமைய கையளிக்கப்பட்டது.
2025-11-17
கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சபையின் 170 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தர்ம யாத்திரை முயற்சியின் ஒரு பகுதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர், யாழ். புத்தூர் மதிஹே பன்னாசிஹா வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 12 ஆம் திகதி மதிஹே பன்னாசிஹா வித்தியாலயம் மற்றும் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 2025 நவம்பர் 14 ஆம் திகதி நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீபீபீ குலதிலக என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணியினரால் 100 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படையினரால் திம்புலாகல நிதன்வல ஆரம்ப பாடசாலை மற்றும் தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதன்வல ஆரம்ப பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் காலாட் படையணி விருந்து மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 29 அன்று சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
2025-10-27
பிரான்சில் வசிக்கும் இலங்கையரான திரு. இனோஷன் சுரன், ஜெர்மனி, துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளை உள்ளடக்கிய பாரிஸிலிருந்து யாழ்ப்பாணம் வரை 10,000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை நிறைவுசெய்தார். 2025 செப்டம்பர் 1 அன்று தனது பயணத்தைத் ஆரம்பித்த அவர் 2025 ஒக்டோபர் 23 அன்று யாழ்ப்பாணத்தை வெற்றிகரமாக வந்தடைந்தார்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடினால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் வழங்கல் திட்டம், 2025 ஒக்டோபர் 24 அன்று அம் / பானம மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
2025 ஒக்டோபர் 19ஆம் திகதி, 7வது பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் சேருநுவர 215 எப் நலன்புரி சமூக நிலையத்தின் கிராம மக்களுக்காக வெடிபொருள் ஆபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வு, சேருநுவர கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளரின் கோரிக்கையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.