பயிற்சி

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரிகளுக்கான ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம் ஒருங்கிணைப்பு அலுவலகத்தால், தொற்றா நோய்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு சொற்பொழிவு 2026 பெப்ரவரி 25 அன்று தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரி கேட்போட் கூடத்தில் நடைபெற்றது.


இராணுவ நலன்புரி நிதி பணிப்பகத்தினால் 2026 பெப்ரவரி 18 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திலும், 2026 பெப்ரவரி 19 ஆம் திகதி பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்திலும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 29 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2026 ஜனவரி 05 முதல் 2026 பெப்ரவரி 13 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 58 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 14 பெப்ரவரி 2026 அன்று நடைபெற்றது.


மிஹிந்து செத் மெதுர நல விடுதியில் உள்ள போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி நலவிடுதியில் ஒரு சிறப்பு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.


பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.


தென் சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் நிலை இரண்டு மருத்துவமனைக்கான முன்-பணியமர்த்தல் பயிற்சி எண் 13 ஆனது 2026 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.


உள்ளக கணக்காய்வு பணிப்பகம், "மூலோபாய பயிற்சி திட்டங்கள் மூலம் உள்ளக மேற்பார்வையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை 2026 ஜனவரி 22 மற்றும் 23 ம் திகதிகளில் இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.


"ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்" திட்டத்தின் கீழ், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 30 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 (2025/II) 2026 ஜனவரி 27, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.