பயிற்சி

மித்ர சக்தி (XI) 2025 பயிற்சி இந்தியாவின் பெல்காவியில் 2025 நவம்பர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. அதற்கமைய பங்கேற்கும் குழுவினருக்கான முன் பயிற்சி பாடநெறி நிகாவேவாவில் உள்ள ஏயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.


இலங்கை இராணுவ உள்ளக விவகாரப் பிரிவு, இராணுவத் தலைமையகத்தின் அனைத்து கிளைகள் மற்றும் பணிப்பகங்களை சேர்ந்த இராணுவ வீரர்களின் பங்கேற்புடன், இராணுவத் தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 07 அன்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது.


வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் தொற்றா நோய்கள் பற்றிய விரிவுரையை நடாத்தியது.


இராணுவ கொள்முதல் தொடர்பான சுங்க நடைமுறைகள் குறித்த சிறப்பு விரிவுரை இராணுவ தலைமையகத்தில் திட்ட பணிப்பகத்தால் 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.


அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ‘தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி’ பாடநெறி –61 போர்ப் பயிற்சிப் பாடசாலையில் 2025 செப்டம்பர் 16, அன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.


இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் 2025 செப்டெம்பர் 08 முதல் 11 வரை ரோயல் ஆஸ்திரேலிய பொறியியல் நிறுவனம் எப்3 கண்ணிவெடி கண்டுபிடிப்பு பட்டறையை நடாத்தியது.


போர் நீச்சல் பாடநெறி இலக்கம் -12ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, 2025 செப்டம்பர் 06 அன்று நாயாறு விஷேட படையணி போர் நீச்சல் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.


இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தினால் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு விரிவுரை நடாத்தப்பட்டது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கியது.


இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் “திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்” என்ற தலைப்பில் விரிவுரை 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடாத்தப்பட்டது.