விஷேட காலாட் நடவடிக்கை 77வது பாடநெறி நிறைவு
2025-06-29

விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 இன் விடுகை அணிவகுப்பு 2025 ஜூன் 28 அன்று மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.
தேசத்தின் பாதுகாவலர்
2025-06-29
விஷேட காலாட் நடவடிக்கை பாடநெறி எண் 77 இன் விடுகை அணிவகுப்பு 2025 ஜூன் 28 அன்று மாதுருஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் அதன் 21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பதுரலிய பாலிந்தநுவர பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ‘தூய இலங்கை’ திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஜூன் 23 ம் திகதியன்று நடத்தியது.
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன அவர்களின் கருத்தின் கீழ் 2025 ஜூன் 18 ஆம் திகதி "இராணுவ உறுப்பினராக நடந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அமர்வை தொழில்முறை ஆலோசகர் லெப்டினன் கேணல் கே.ஏ. முத்தலிப் (ஓய்வு) நடாத்தினார்.
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை நடாத்திய, படையலகு பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.51 யை 2025 ஜூன் 18 ஆம் திகதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் லெப்டினன் கேணல் டி.பி. ராஜசிங்க நினைவு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவு நீச்சல் தடாகத்தில் அடிப்படை உயிர்காக்கும் பாடநெறி எண் 24 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நடவடிக்கைகள் பணிப்பகத்தின் கீழ் "தூய இலங்கை" திட்டத்தின் கேணல் ஒருங்கிணைப்பாளர் கேணல் எம்.என். குணவர்தன பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஒருகொடவத்தை சிவில் நிர்வாக பணிப்பகத்தில் தேசிய "தூய இலங்கை" கருத்து குறித்த விரிவுரையை நடத்தினார். இராணுவத்தின் 71 சிவில் ஊழியர்கள் இந்த விரிவுரையில் பங்கேற்றனர்.
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 55 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 06 ஜுன் 2025 அன்று நடைபெற்றது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினருடன் இணைந்து மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான பாடநெறி இலக்கம் 30 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 ஜூன் 05 முதல் ஜூன் 04 வரை ந்த்தப்பட்டது.
இந்திய இராணுவ நடமாடும் பயிற்சி குழுவால் 2025 மே 5 முதல் ஜூன் 3 வரை பனாகொடை ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் உயர் சைபர் பாதுகாப்பு பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சமகால சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான ஆழமான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டமையப்பட்டிருந்தது.
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 2025 மே 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு 'திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் பட்டறை நடாத்தப்பட்டது.