பயிற்சி

பனாகொடை இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் டேக்வாண்டோ பயிற்சி வெற்றிகரமாக 2026 ஜனவரி 08 அன்று நடாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை லிவிங் வெல் டேக்வாண்டோ கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிராண்ட் மாஸ்டர் டெரெக் சம்னர் தலைமையில், இங்கிலாந்து பயிற்றுனர்கள் நடாத்தினர். இது இராணுவ டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பெறுமதியான தொழில்நுட்ப, தந்திரோபாய மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்கியது.


சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் ஏற்பாட்டில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பாடநெறி எண் 31 (அதிகாரிகள்) இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 நவம்பர் 24 முதல் 2025 டிசம்பர் 23 வரை வெற்றிகரமாக இடம்பெற்றது.


பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 19 ஆம் திகதி சம்பிரதாய விழாவுடன் நிறைவடைந்தன.


கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி – 108 இன் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 01 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தப்பட்டது.


மினுஸ்கா பணிக்கான தயார்படுத்தலுக்காக நடாத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்கான படையலகு குழு முன்-பணியமர்த்தல் பயிற்சி பாடநெறி எண். 11 – நிலை II, 2025 நவம்பர் 21 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவடைந்தது.


பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மூன்று கட்ட முயற்சியின் ஆரம்ப கட்டமாக, விரைவு பதிலளிப்பு குழு இரண்டு வார பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 24 ஆம் திகதி பனாலுவையில் ஆரம்பிக்கப்பட்டது.


படையலகு உதவி ஆயுத பாடநெறி - 89 (2025/II) 2025 நவம்பர் 08, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.


ரணவிரு வள மையம், அதன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிதி முகாமைத்துவம் குறித்த விரிவுரையை ரணவிரு வள மைய வளாகத்தில் 2025 நவம்பர் 12 அன்று நடாத்தியது.


இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒரு நாள் பட்டறையை வழங்கல் கட்டளை தலைமையகம் 2025 நவம்பர் 04 ஆம் திகதி நடாத்தியது.


அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 57 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 28 ஒக்டோபர் 2025 அன்று நடைபெற்றது.