இராணுவத் தளபதியுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம விருந்தினருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நுழைவாயிலில் வாகனம் தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூஎஎஸ்ஆர் விஜேதாச டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு அதிதிகளை வரவேற்றார்.