செய்தி சிறப்பம்சங்கள்

இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


தற்போது உயர் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ருவாண்டா பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தூதுக்குழு, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (11) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தது.


தென் சூடான் நிலை 2 மருத்துவமனையில், 9 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்களை கொண்ட தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அமைதி காக்கும் 10 வது குழு ஒரு வருட பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 2025 பெப்ரவரி 11, அன்று இலங்கைக்கு வருகை தந்தது. ஏனைய 07 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் தென் சூடானில் தங்கியிருப்பதுடன், அவர்கள் கடமைகளை முடித்த பின்னர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஜி. கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 11 அன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப் என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.ஏ. சமித்த துலான் அவர்கள் உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.


இலங்கை இராணுவத்தின் முன்னாள் பதவி நிலை பிரதானியும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு, 2025 பெப்ரவரி 8 அன்று அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 66 வது பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 10 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.


தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 01 வரை நடைபெற்ற தேசிய உள்ளக படகுப்போட்டி 2025 இல் இலங்கை இராணுவ படகு அணி வெற்றி பெற்றது. முப்படைகள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகளின் பங்கேற்புடன் இந்தப் போட்டி நடைபெற்றது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 08 அன்று வன்னி பாதுகாப்புப் படைக்கு விஜயம் மேற்கொண்டார்.


2025 பெப்ரவரி 04 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய ஒற்றுமையையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான தேசபக்தி நிகழ்வுகளுடன் 77 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.