செய்தி சிறப்பம்சங்கள்

கொழும்பு புனித பெனடிக் கல்லூரியில் 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி நடைபெற்ற பாராட்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களும் கலந்து கொண்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சீ.கே வனசிங்க ஆர்.எஸ்.பீ யூ.எஸ்.பீ, அவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 பெப்ரவரி 06 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் இணைந்து 2025 பெப்ரவரி 5, அன்று ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாய உள்ளிட்ட புனித தலங்களில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்டதுடன் மதகுருமார்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்று கொண்டார்.


இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 30 அன்று ரணவிரு ஆடை தொழிற்சாலையில் நடைபெற்ற முகாமைத்துவ குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் புதன்கிழமை (பெப்ரவரி 5) பாங்கொல்லை அபிமன்சல 3 நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 05 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகதிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை இன்று மதியம் (பெப்ரவரி 03) 2025 இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இத் தூதுக்குழுவுடன் தூதரகத்தின் துணைத் தலைவி திருமதி சோங்யீ யுங் அவர்களும் குழுவுடன் இணைந்தார்.


இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 31 அன்று 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார்.


பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.


ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தென் சூடானிலுள்ள சிறிமெட் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் 11 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் 2025 ஜனவரி 31 வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.