30th June 2025
7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் புனானி பகுதியில் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய வீட்டைக் கட்டி 2025 ஜூன் 29 அன்று வழங்கினர்.
திருமதி நிலுகா அல்கடுவ, பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.லசந்த பண்டார, திரு.சஞ்சய எதிரிசிங்க மற்றும் திருமதி.அநுராதா நாணயக்கார ஆகியோரின் அனுசரணையின் மூலம் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அனுசரணையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.