இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கேணல் கே.ஏ.டி.சீ.ஜே. கொடித்துவக்கு அவர்கள் பனாகொடை இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் 2025 ஒக்டோபர் 08 அன்று 15வது பணிப்பாளராக மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.