2025 ஆம் ஆண்டுக்கான 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு

2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 22 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 24 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 243 பேர் பங்கேற்றனர், மேலும் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீரர்கள் பின்வரும் அடைவுகளை பெற்றனர்:

• 3வது இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எச்கேஎன் பெரேரா வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

• 3வது இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த சிப்பாய் கேடபிள்யூஎஸ்எம்ஏ தசுன்பிரிய வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

• 7வது இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த சிப்பாய் என்எம்எம் நரசிங்க வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இராணுவ குத்துச்சண்டை அணியின் தலைவரான மேஜர் ஜெனரல் பிகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.