7th March 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 06 அன்று தனது அலுவலகத்தில் புதிதாக தொகுக்கப்பட்ட 75 ஆண்டுகள் பெருமை இதழின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
பொறியியல் சேவைகள் படையணி தனது 75வது ஆண்டு நிறைவை 2025 ஜனவரி 10 அன்று பெருமையுடன் கொண்டாடியது. இந்த ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், கடந்த ஏழரை தசாப்தங்களாக அதன் வளமான வரலாறு, பரிணாமம் மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை வெளிப்படுத்தும் 75 ஆண்டுகள் பெருமை இதழை படையணி வெளியிட்டது.
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசி பீஎஸ்சீ அவர்கள், நிலைய தளபதி பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்களுடன் இணைந்து இந்த சஞ்சிகையின் முதல் பிரதியை இராணுவத் தளபதியிடம் வழங்கினர்.