விளையாட்டு

6 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் ஓய்வுபெற்ற படைவீரர் எம்.ஜீ.ஆர்.எம்.என்.பீ.எஸ். குமார 2026 மே 07 முதல் 09 வரை மாலைத்தீவின் மாலேவில் நடைபெற்ற 2 வது சர்வதேச போர்வீரர்கள் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றார்.


2026 ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளின் போது, 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் அவர்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.


இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பஞதியவர்களான குத்துச்சண்டை போட்டி 2026 மே 04 முதல் 08 வரை தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.


பொதுநலவாய இளைஞர்/கனிஷ்ட சாம்பியன்ஷிப் மற்றும் யுனிவர்சல் கிண்ண போட்டிகள் 25 ஏப்ரல் 2026 முதல் 02 மே 2026 வரை சமோவா அப்பியாவில் நடைபெற்றன.


2026 மே 03 ஆம் திகதி கொரியா மொக்போவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாவாணையற்ற அதிகாரி 1 எச்.எல்.என்.டி. லேகம்கே மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.எஸ்.ஜே. ரணசிங்க ஆகியோர் மகளிர் மற்றும் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.


2025/2026 இலங்கை கிரிக்கெட் பி மூன்றாண்டுத் தொடர் 15 நவம்பர் 2025 முதல் 17 பெப்ரவரி 2026 வரை நடைபெற்றது. இராணுவ கிரிக்கெட் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் கழகம் உட்பட பன்னிரண்டு முக்கிய கழகங்கள் இத்தொடரில் போட்டியிட்டன.


சீனா சான்யாவில் 2026 ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற்ற 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் – 2026 இல் இலங்கை இராணுவ வீரர்கள் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். இராணுவ தடகளக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.


இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவினால் நடாத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டு இராணுவ கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ மைதானத்தில் நடைபெற்றது. 2026 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டித்தொடரில், டி20, 50 ஓவர் ‘ஏ’ பிரிவு மற்றும் 50 ஓவர் ‘பி’ பிரிவு என போட்டிகள் நடைபெற்றன.


கண்டி மலைநாட்டு குறிப்பார்த்து சுடல் விளையாட்டு கழகம், இலங்கை சர்வதேச கள குறிப்பார்த்து சுடுதல் கூட்டமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'ஷார்ப் ஷூட்டர்ஸ் 2026 – இரண்டாம் நிலைச் சுடுதல் போட்டி', முப்படைகளின் மற்றும் சிவில் போட்டியாளர்களின் பங்கேற்புடன் 2026 மார்ச் 26 முதல் 29 வரை நடத்தப்பட்டது.


இலங்கை இராணுவ முப்போட்டி அணி 2026 பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற இரும்பு மனிதன் 70.3 கொழும்பு போட்டியில் சிறந்து விளங்கி, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இராணுவத்திற்கு மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.