51 வது காலாட் படைப்பிரிவு வரலாற்று சிறப்புமிக்க நாகதீப புராண ராஜமஹா விகாரையில் 2026 மார்ச் 01 ஆம் திகதி ஒரு தான நிகழ்வை நடாத்தியது.
இராணுவ சிறப்பம்சம்
இராணுவத் தளபதியின் எண்ணகருவிற்கமைய, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் முதலாம் படை படையினரால் 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இலங்கை இராணுவத்தின் 77 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “நெலும் பியச” கேட்போர்கூடத்தில் “கோர்ப்ஸ் கிரியேட்டர்ஸ் எக்ஸ்போ” என்ற கருப்பொருளின் கீழ் ஒரு புத்தாக்க போட்டி நடத்தப்பட்டது.
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடிதுவக்கு என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அதன் தலைமையக வளாகத்தில் 57 வது காலாட் படைப்பிரிவு தனது 19 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிகம பொலிசாருடன் இணைந்து மாத்தறை மாவட்டத்தின் வெலிப்பிட்டி பிரதேச செயலகப் பகுதியில் 2026 பெப்ரவரி 24 அன்று கூட்டுச் சோதனை நடத்தப்பட்டது.
கிருலப்பனையில் 05 கிலோ ஹஷிஷுடன் ஒருவர் கைது
2026-02-27
இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2026 பெப்ரவரி 25 அன்று கோனஹேன விசேட அதிரடி படை அதிகாரிகளுடன் இணைந்து ஒரு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, கிருலப்பனை பகுதியில் பலபொகுன வீதி சிறுவர் பூங்காவில் 05 கிலோ ஹஷிஷ் மற்றும் ஒரு ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 17 வது ஒழுக்க பணிப்பாளராக பிரிகேடியர் எச்.ஏ.எச்.சி. அல்விஸ் யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தில் 2026 பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வின் போது மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
பரகஹதெனிய, மாவத்தகம தலைக்கவசங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
11 வது காலாட் படைப்பிரிவின் 16 ஆண்டு நிறைவு
2026-02-16
11 வது காலாட் படைப்பிரிவு அதன் 16 வது ஆண்டு நிறைவை 2026 பெப்ரவரி 15 அன்று 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் அதி வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களை பிஷப் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பிரிகேடியர் எம்.ஜே. உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது காலாட்படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.