இராணுவ சிறப்பம்சம்

2026 மார்ச் 30 அன்று இரத்தினபுரியில் உள்ள கரவிட்ட வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் மின்சாரக் கோளாறால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.


14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் ஆர்.கே.பீ.ஏ.ஆர்.கே. ராஜபக்ஷ 2026 மார்ச் 21 அன்று பதவிய பொது விளையாட்டு மைதானத்தில் செரண்டிப் உலக சாதனைகள் குழுவின் மேற்பார்வையின் கீழ் பல செரண்டிப் உலக சாதனைகளை நிலைநாட்டி இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க பெருமையையும் சிறப்பையும் சேர்த்துள்ளார்.


வட மாகாணத்தின் கௌரவ ஆளுநர், திரு. என். வேதநாயகன் அவர்கள், 2026 மார்ச் 23 அன்று யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.


வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 28வது ஆண்டு நிறைவு விழாவை 2026 மார்ச் 18 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.


இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் தென் கடற்பகுதியில், IMULA - A- 1108GLE என்ற பதிவு எண் கொண்ட பிரியங்கா-6 என்ற நெடுநாள் பயணக் கப்பலில் சுமார் 250 கிலோ கொக்கைனுடன் 6 நபர்களைக் கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதல்செய்யப்பட்ட போதை பொருட்களும் சந்தேக நபர்களும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.


மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் தனது 13 வது ஆண்டு நிறைவை 2026 மார்ச் 14 ஆம் திகதி தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடியது.


ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடத்தின் முகாமைத்துவ மற்றும் நிதித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழங்கல் தினம் 2026 ஐ முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட வழங்கல் தலைமையுடன் ஒரு நேர்காணல் லொஜிஸ்டிக் டைம் இதழில் வெளியிடுவதற்காக 2026 மார்ச் 12 ஆம் திகதி உபகரண பணிப்பாளர் நாயக அலுவலக கலந்துந்துரையாடல் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


572 வது காலாட் பிரிகேட்டின் அறிவுறுத்தலின் பேரில், 8வது இலங்கை சிங்க படையணி படையினரால் 2026 மார்ச் 12 ஆம் திகதி கேகாலை, புவக்தெனிய, நில்வாக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ வெற்றிகரமாகக் அணைக்கப்பட்டது.


பிரிகேடியர் எஸ்.ஆர். ஹேவாபதிரண எல்எஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 20வது சொத்து முகாமைத்துவ பணிப்பாளராக 2026 மார்ச் 10 அன்று மத அனுஷ்டானம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் கடற்படைத் தளபதியின் ஒப்புதலுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைத் தளத்திலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலான "லங்கா தேவி"யில் திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப்பயணத்திற்காக கடற்படை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.