சிவில் பணிகள்
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரண நன்கொடை வழங்கல்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மதுபரா சிங்கள மகா வித்தியாலயம், கட்டியடப்பன ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், தம்பனேகுளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை மற்றும் பன்னிவெட்டுவான் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 22, அன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், 25 ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இராணுவத்தினால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
543 வது காலாட் பிரிகேட் படையினர், 2025 டிசம்பர் 22 ஆம் திகதி மன்னார் கலாசார மண்டபத்தில் 142 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.
பொறியியல் சேவைகள் படையணியினால் இரத்த தான திட்டம்
பொறியியல் சேவைகள் படையணியின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2025 டிசம்பர் 24 ஆம் திகதி படையணி தலைமையகத்தில், அதன் படையினர் இரத்த தான முகாமை நடாத்தினர்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் பங்கேட்புடன் குருளை சாரணர் தின கொண்டாட்டம்
கண்டி மாவட்ட சாரணர் கிளை, 17 வது கம்போரியுடன் இணைந்து, 2025 நவம்பர் 16 ஆம் திகதி போகம்பரா மைதானத்தில் குருளை சாரணர் தினத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தெமட்டகஹவெலவில் ஏழைக் குடும்பத்திற்கு பரிசளிக்கப்பட்ட புதிய வீடு
நாரம்மல, தெமட்டகஹவெலவில் வசிக்கும் ஓர் ஏழை குடும்பத்திற்கு உபகரணங்களுடன் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று சம்பிரதாயத்திற்கமைய கையளிக்கப்பட்டது. ரொஷான் மஹாநாம அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் திரு. ஏ.பி. டீன் அவர்களின் தாராளமான நிதி பங்களிப்பின் மூலம், 571 காலாட் பிரிகேட்டின் கீழ் உள்ள 1வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 9வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் உதவியுடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சபையின் 170 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தர்ம யாத்திரை முயற்சியின் ஒரு பகுதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர், யாழ். புத்தூர் மதிஹே பன்னாசிஹா வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 12 ஆம் திகதி மதிஹே பன்னாசிஹா வித்தியாலயம் மற்றும் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினால் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 2025 நவம்பர் 14 ஆம் திகதி நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் குறைந்த வருமானமுடைய 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீபீபீ குலதிலக என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 7 வது கெமுனு ஹேவா படையணியினரால் 100 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகம்
கிழக்கு பாதுகாப்புப் படையினரால் திம்புலாகல நிதன்வல ஆரம்ப பாடசாலை மற்றும் தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி 2025 நவம்பர் 07 ஆம் திகதி நிதன்வல ஆரம்ப பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இராணுவத்தினரால் சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் காலாட் படையணி விருந்து மண்டபத்தில் 2025 ஒக்டோபர் 29 அன்று சுற்றுலாதுறை தொடர்பான செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.