சிவில் பணிகள்
பதுளை மாவட்டத்தில் தித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான பணிகளை இலங்கை பொறியியல் படையணி படையினர் துரிதப்படுத்தல்
தித்வா சூறாவளியின் தாக்கம் நாடு முழுவதும் அழிவின் தடத்தை விட்டுச் சென்றதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்களை இடம்பெயரச் செய்தது மற்றும் குடியிருப்பு சொத்துக்கள் மற்றும் பொது உட்கட்டமைப்புகளுக்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தியது.
இராணுவ படையினரால் தம்புள்ளை தள வைத்தியசாலை இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கல்
2026 மே 20 அன்று தம்புள்ள தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடத்தப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியில் 53 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் பங்கேற்றனர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் விழுந்த மரக்கிளையை இராணுவத்தினர் அகற்றல்
2026 மே 17 ஆம் திகதி பெய்த கனமழையைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் கூரையின் மீது விழுந்து வைத்தியசாலையின் நடைபாதையைச் சேதப்படுத்திய மரக்கிளையை 4 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அகற்றியுள்ளனர்.
23 வது காலாட் படைப்ப்பிரிவின் மின்சார வாகன மின்னேற்றும் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு
பசுமைப் போக்குவரத்து மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, 23வது காலாட் படைப்பிரிவு 2026 மே 13 ஆம் திகதி மின்சார வாகன மின்னேற்றும் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தது.
யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கப் படையினரின் உதவி
2026 மே 09 திகதி அதிகாலை வேளையில் யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கு 512 வது காலாட் பிரிகேட் படையினர், 17 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மற்றும் 14 வது கஜபா படையணி படையினர் ஆகியவற்றின் படைவீரர்கள் உதவினர்.
இராணுவ படையினரால் சிவில் பணியாளர் ஒருவருக்குப் புதிய வீடு
4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் திருகோணமலை, கின்னியாவில், இலங்கை கவச வாகன படையணி சிவில் பணியாளரான திரு. ஏ.கே. தம்யித் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
திருகோணமலையில் இராணுவத்தினரால் இரத்த தான முகாம்
திருகோணமலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, 223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.டி.ஐ. குணவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி முதூர் கலாசார மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இத்திட்டம் திருகோணமலை இரத்த வங்கியின் மருத்துவ பணியாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவத்தினரால் அரச சாந்தி முதியோர் இல்லத்தில் தானம் வழங்கும் நிகழ்வு
எயர்மொபைல் பிரிகேடின் 32வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி சாலியபுர அரச சாந்தி முதியோர் இல்லத்தில் 260 முதியோர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தினர்.
இராணுவத்தினரால் இரத்ததான முகாம்
பதுளை போதனா வைத்தியசாலையின் தேசிய இரத்தமாற்று சேவையின் வேண்டுகோளுக்கிங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் 2026 ஏப்ரல் 22 அன்று தியத்தலாவ இராணுவ தள வைத்தியசாலையில் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரால் புனானியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டம்
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய படைப்பிரிவின் படையினர் 2026 ஏப்ரல் 20 ஆம் திகதி புனானி பஞ்ச மகா விகாரையில், புனானியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை நடாத்தினர்.