06th October 2017 21:02:27 Hours
ஹோமாகமையில் இடம்பெறவுள்ள ‘Army Para Games - 2017’ இப்போட்டியில் திறமையான போட்டி வீரர்கள் எதிர் வரும் நவம்பர் 22,23 ஆம் திகதிகளில் திவிகம விளையாட்டரங்கில் தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போட்டியில் வெளிநாட்டு விரர்களும் போட்டியிடயுள்ளனர். இதில் தென் கொரியாவையும் உள்ளடங்கும்.
இந்த வருடத்திற்கான இப்போட்டியில் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் கலந்து கொள்வதன் முலம் விளையாட்டில் புதிய வித்தியாசத்தை ஏற்படுத்தகூடியாதக இந்த விளையாட்டு அமையவிருக்கின்றது.
இந்த ஆண்டில் சக்கர நாற்காலி மற்றும் கூடைப்பந்து போன்ற பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்த நிகழ்விற்கு பிறகு 2 மாத காலமாக அவர்களது படைத்தலைமையங்களில் தேர்தெடுக்கப்பட்ட விளையாட்டன சைக்கிள் ஓட்டுதல்,சக்கர நாற்காலி, மரத்தன், வில்வித்தை, கூடைப்பந்து ,வலைப்பந்து,கடற்கரை பந்து, கிரிக்கெட், நீச்சல், போன்றவை பல விளையாட்டு நிகழ்வுகள் தியகம விளையாட்டு அரங்கில் இடம்பெற்றன.
இந்த மெகா விளையாட்டு போட்டியில் 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றவுள்ளனர்.போட்டி இறுதியில் இப்போட்டியாளர்கள் வெற்றிபெருவதற்காக தமது திறமைகளை வெளிகாட்டுவார்கள்
இப்போட்டி நவம்பர் 22, 23, 24ஆம் திகதிகளில் தியகம விளையாட்டரங்கில் நடைப்பெறும் இப் போட்டிகள் 21 தடவைகளில் இடம்பெறுவதோடு வேறு பல நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
இப்போட்டியானது 1991ஆம் ஆண்டில‘Army Disable Sports Meet’எனும் தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போட்டி 2010ல் ‘Sri Lanka Army Para Games.’அழைக்கப்பட்டது.
1. 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா போட்டிகள்
2. இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்
3. 2017ஆம் ஆண்டிற்கான பரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு
Sport media | NIKE HOMME