ஐநா பணிகள்

இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு நடமாடும் பயிற்சி குழுக்களை நடத்துவதற்காக இலங்கை விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஜெர்மன் ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் அடங்கிய உளவுப் பிரிவு 2025 நவம்பர் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் இறுதி காலாண்டு படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 15 அதிகாரிகள் கொண்ட குழுவால், நகௌராவில் உள்ள ஸ்ரீ முகாமில் 2025 நவம்பர் 19 ஆம் திகதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


2025 ஒக்டோபர் 23 அன்று லெபனானில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் நடைபெற்ற 'எல்லைகள் இல்லாத சுவைகள்' என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச கலாசார மற்றும் உணவு திருவிழாவில் 16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு பங்கேற்றது.


ஐக்கிய நாடுகளின் வழங்கல் அதிகாரிகள் பாடநெறி எண் - 07 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டது.


லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. கபில ஜயவீர அவர்கள் 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதி லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மற்றும் பணி தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


ஐக்கிய நாடுகளின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி எண் 06, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 செப்டம்பர் 08 முதல் 19 வரை நடத்தப்பட்டது.பாடநெறியின் நிறைவு விழா 2025 செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது.


2025 ஜூலை 04 ஆம் திகதி கடமைகளை ஏற்றுக்கொண்ட 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழு, அதன் முதல் படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வுக்கு உட்பட்டது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கொண்ட குழுவால், இந்த ஆண்டுக்கான 3 வது காலாண்டு படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வு 2025 செப்டம்பர் 04 ஆம் திகதி நகோராவில் உள்ள ஸ்ரீ தளத்தில் நடாத்தப்பட்டது.


நகோராவில் உள்ள 16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் புதிய படைத் தளபதியான கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் திரு. கபில ஜயவீர அவர்களை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பெய்ரூட் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி எண் – 04 உலகளாவிய அமைதி காக்கும் நடவடிக்கையின் முன்முயற்சியின் ஆதரவில் 2025 ஆகஸ்ட் 11 முதல் 27 வரை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.


புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படை குழுவின் தளபதி லெப்டினன் கேணல் வைஎஸ்எச்என்பீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 26, அன்று நாகோரா முகாமில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் டியோடாடோ அபக்னாராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.