ஐ.நா வழங்கல் அதிகாரிகள் பாடநெறி எண் 07 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் நிறைவு

ஐக்கிய நாடுகளின் வழங்கல் அதிகாரிகள் பாடநெறி எண் - 07 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 செப்டம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டது.

பாடநெறியின் நிறைவு விழா 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் 24 மாணவ அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 02 மாணவ அதிகாரிகளும், பங்களாதேஷ், பிஜி, இந்தோனேசியா, மங்கோலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 06 வெளிநாட்டு மாணவ அதிகாரிகளும் இந்தப் பாடநெறியில் பங்கேற்றனர்.

இந்த குழுவில் சர்வதேச அமைதி நடவடிக்கை அமைப்பின் பாட நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர். குழுத் தலைவராக கனடாவைச் சேர்ந்த திருமதி டிரேசி மார்டினோ, நார்வேயைச் சேர்ந்த திரு. ஸ்டீன் எலிங்சன், டென்மார்க்கைச் சேர்ந்த திரு. ஜென்ஸ் வின்தர் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த திரு. மார்க் ஷெல்டன் ஸ்பர்லிங் ஆகியோர் ஏனைய பாட நிபுணர்களாகவும் பாடநெறியை வழிநடாத்தினர்.

இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமை பயிற்றுவிப்பாளரான கெமுனு ஹேவா படையணியின் லெப்டினன் கேணல் பீ.எஸ்.டி டி அல்விஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.