யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தேசத்தின் பாதுகாவலர்
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 05 ஜனவரி 2025 அன்று 51 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
2025 ஜனவரி 3 ம் திகதி பொல்கஹவெல புனித பெர்னாடெட்ஸ் மாதிரிப் பாடசாலையில் நடைபெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களின் உணவகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சாப்பாட்டு மண்டபம் 03 ஜனவரி 2025 படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2 ஜனவரி 2025 அன்று 1 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நேற்று (ஜனவரி 03) யாழ்ப்பாணம், வேலணை நான்காம் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இச்சுற்றிவளைப்பின் போது இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டாத 50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சுற்றிவளைப்பின் போது, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 3 ஜனவரி 2025 அன்று 55 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியின் ஒருங்கிணைப்புடன், 04 ஜனவரி 2025 அன்று மருதங்கேனி கலாசார மையத்தில் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கும் நன்கொடை நிகழ்வு இடம்பெற்றது.
பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சி அவர்கள் 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு 28 டிசம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கேணல் டி.ஜி.என். டி சில்வா அவர்கள் பனாகொடை இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் 2025 ஜனவரி 01 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது அதன் 14 வது பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.
லெப்டினன் கேணல் டிஎம்சீஎல் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 01 அன்று சுருக்கமான நிகழ்வின் போது எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.