இராணுவ சிறப்பம்சம்

வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.


கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 01 ஜனவரி 2025 அன்று இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ கடமைகளை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக முறையான நிகழ்வின் போது கடமை ஏற்றார்.


7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.


56 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் வன்னி – 2024, வவுனியா கலாசார மண்டபத்தில் 29 டிசம்பர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.


51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 30 டிசம்பர் 2024 அன்று 511 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.


இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.


541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.பீ. ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 541 வது காலாட் பிரிகேட் படையினர் 30 டிசம்பர் 2024 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.


பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி 26 டிசம்பர் 2024 அன்று போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரையை நடாத்தியது. இராணுவத்தினரிடம் போதைப்பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.