இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கேணல் டி.ஜி.என். டி சில்வா அவர்கள் பனாகொடை இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் 2025 ஜனவரி 01 ஆம் திகதி நடைபெற்ற எளிமையான நிகழ்வின் போது அதன் 14 வது பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.

நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.