செய்தி சிறப்பம்சங்கள்
பனாகொடையில் நடைபெற்ற படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இராணுவத் தளபதி கலந்து சிறப்பித்தல்
படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2026 ஜனவரி 31 அன்று பனாகொடை ரக்பி மைதானத்தில் நடத்தப்பட்டது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 இல் இலங்கை இராணுவம் வெற்றி
தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2026 அனுராதபுர சல்காது மைதானத்தில் 2026 ஜனவரி 25 அன்று நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப்பை இலங்கை கயிறு இழுத்தல் சம்மேளனம் நடத்தியதுடன் இதில் 28 கயிறு இழுத்தல் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இராணுவத் தளபதி ராகம ரணவிரு செவன நலவிடுதிக்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 28 அன்று ராகம ரணவிரு செவன நலவிடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
பனாகொடை விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி எண். 78 இன் அனுபவப் பகிர்வு பட்டறையில் இராணுவ தளபதி
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 22 அன்று பனாகொடையில் உள்ள இலங்கை இலோசாயுத காலாட் படையணியில் நடைபெற்ற விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி எண். 78 இன் அனுபவப் பகிர்வு பட்டறையில் கலந்து கொண்டார். விஷேட காலாட் படை செயல்பாட்டு பாடநெறி வீரர்களின் சகிப்புத்தன்மை, மூலோபாய சிந்தனை மற்றும் சிறிய குழு செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.டி சமரசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 20 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தூதுக்குழு இராணுவத் தளபதியை சந்திப்பு
நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியைச் சேர்ந்த தூதுக்குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும், பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2026 ஜனவரி 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவத்தினால் மனித வள முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு
இலங்கை இராணுவ மறுசீரமைப்பு செயல்முறைக்கு இணங்க, நவீன மனித வள முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.எல்.ஐ. கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ மற்றும் மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணாநாயக்க ஆகியோர், 2026 ஜனவரி 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.