செய்தி சிறப்பம்சங்கள்
59 வது வருடாந்த இராணுவ வீதி ஓட்ட போட்டி நிறைவு
தொடர்ச்சியாக 59 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த 'இராணுவ வீதி ஓட்டம்' ஞாயிற்றுக்கிழமை (2026 மார்ச் 08) காலை இராணுவத் தலைமையக நுழைவாயிலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சிடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.
இராணுவ கீதத்தை இயற்றியவர்களுக்கு இலங்கை இராணுவம் கௌரவிப்பு
இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1999 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இராணுவ கீதத்தின் இசையமைப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக இலங்கை இராணுவம், 2026 மார்ச் 6 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.என்.டி. கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் 4வது முகாமைத்துவ குழுக் கூட்டம்
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 4வது முகாமைத்துவ குழுக் கூட்டம் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்த அமர்விற்கு இராணுவ பதவி நிலை பிரதானியும் குழு தலைவருமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார்.
இராணுவ பதவி நிலைப் பிரதானி இலங்கை பொறியியல் படையணியின் கட்டளையின் கீழுள்ள நிறுவனங்களுக்கு விஜயம்
Major General D.K.S.K. Dolage USP nps psc, Chief of Staff of the Army, made a series of official visits to the under-command establishments of the Corps of Sri Lanka Engineers on 15, 18, and 19 February 2026.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
தர உத்தரவாதம் மற்றும் பரிசோதனை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவப் போர்க் கல்லூரியின் மூன்றாவது முகாமைத்துவ குழுக் கூட்டம்
இராணுவப் போர் கல்லூரி தனது 3வது நிர்வாகக் குழு கூட்டத்தை 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி புத்தல வளாகத்தில் கூட்டியது. இந்தக் கூட்டத்திற்கு இலங்கை இராணுவத்தின் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டம், உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கு வழி வகுத்தது.
சர்வதேச இராணுவ சாகச சவால் கிண்ணம் 2026 நிறைவு
சர்வதேச இராணுவ சாகச சவால் கிண்ணம் 2026, இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பியர்ஹெட் சாகச கிராமத்தில் 2026 பெப்ரவரி 12 முதல் 25 வரை நடைபெற்றது. இதில் எட்டு நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன.
இராணுவத் தளபதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
தொண்டர் படையின் தளபதி 2 வது (தொ) இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணிக்கு விஜயம்
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 24 அன்று களனிமுல்லை 2வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் கட்டுநாயக்க 2வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.