செய்தி சிறப்பம்சங்கள்
2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதியினால் மரம் நடும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைப்பு
2026 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பொறுப்புடன் வேரூன்றுவோம் – தலைமுறைகளுக்காக வளர்ப்போம்” என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜூன் 05 ஆம் திகதி பத்தரமுல்லை இராணுவ விவசாய திட்ட வளாகத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதும், அர்த்தமுள்ள செயல்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்குவதும் ஆகும்.
இராணுவத் தளபதி மூலிகை தாவரங்கள் குறித்த பிரசுரத்தை பெறல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் விஷேட படையணியின் கோப்ரல் எம்.ஐ.எஸ். பண்டார எழுதிய “விஷ்மித ஹெல ஒசுவ” நூலின் இரண்டாம் தொகுதியை 2026 ஜூன் 05 அன்று இராணுவத் தலைமையகத்தில் பெற்றுக்கொண்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் ஏ.ஏ.டி.பி குலத்திலக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஜூன் 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வெசாக் தானம் வழங்கல்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் மேற்பார்வையின் கீழும், நாடு தழுவிய வெசாக் பண்டிகையைக் குறிக்கும் வகையில், 2026 மே 30 முதல் 31 வரை தொடர்ச்சியான தான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியான இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக 2026 ஜூன் 02 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
2026 ஆம் ஆண்டு மத்திய மற்றும் தெற்காசிய ரக்பிப் போட்டியில் சிறந்து விளங்கிய இலங்கை இராணுவ மகளிர் அணி வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
2026 ஆம் ஆண்டு மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி கூட்டமைப்பின் மகளிர் ரக்பிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை இராணுவ மகளிர் வீராங்கனைகளின் சிறப்பான செயற்பாட்டை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பாராட்டினார். இப்போட்டி, இப்பிராந்தியத்தைச் சேர்ந்த 11 நாடுகளின் பங்கேற்புடன், 2026 மே 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்டில் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் 69வது பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.
இராணுவத் தலைமையகத்தின் வெசாக் வலயம் இராணுவத் தளபதியினால் திறப்பு
இராணுவத் தலைமையகத்தின் வெசாக் வலயம் 2026 மே 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினரின் நாடு முழுதும் தழுவிய வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள்
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக படையினர் 2026 மே 30 அன்று செவனபிட்டிய சாமவிஹாரையில் வெசாக் பண்டிகையைக் கொண்டாடினர். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துச் சிறப்பித்தார்.
நிலை உயர்வுபெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.