செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவ படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவு
இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவப் படையணிகளுக்கு இடையிலான எல்லே சாம்பியன்ஷிப் - 2025 போட்டி பன்னிரண்டு படையணிகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2025 டிசம்பர் 12 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
ஹங்குரான்கெத்தவில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவருக்கு மீட்கப்பட்ட பெறுமதி மிக்க பொருட்களை படையினர் ஒப்படைத்தனர்
642 வது காலாட் பிரிகேட்டின் கீழ் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நிலை நிறுத்தப்பட்டிருந்த படையினர் ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து, மீட்கப்பட்ட பெறுமதி மிக்க பொருட்களை நிலச்சரிவால் வீடு முற்றிலுமாக அழிந்த வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் மனிதாபிமான பணிக்காக ஐக்கிய அரபு இராச்சிய அனர்த்த மீட்புக் குழுவிற்கு பாராட்டு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிவாரணக் குழுவின் தலைவரான வைத்தியர் ஹமூத் சயீத் ஹரேப் அல் அபரி தலைமையிலான 74 பணியாளர்களைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனர்த்த மீட்புக் குழு, 2025 டிசம்பர் 15, அன்று நீர்கொழும்பு ஹெரிடன்ஸ் ஹோட்டலில் இலங்கைக்கு வழங்கிய சிறந்த மனிதாபிமான சேவைக்காக முறையாகப் பாராட்டப்பட்டது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீடிஜேசீ பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் கேஜீஎம்என் செனவிரத்ன யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கேஎம்ஜீ பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் கேஜீயூடி ஜயசிங்க ஆகியோர், 2025 டிசம்பர் 15 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
இலங்கையில் மனிதாபிமான பணிக்காக இந்திய இராணுவத்தின் 60 வது கள மருத்துவமனைக்கு பாராட்டு
The disaster relief medical assistance provided by the Indian Army’s 60 Parachute Field Hospital in the wake of the devastating Ditwah Cyclone was formally commended on 14 December 2025 at the Army Cantonment, Panagoda, in recognition of its exceptional humanitarian impact and professional excellence.
இராணுவத் தளபதி கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதியில் இராணுவ படையினரின் உதவியுடன் நடைபெற்று வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, 2025 டிசம்பர் 13 மற்றும் 14ம் திகதிகளில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக பகுதிக்கு விஜயம் செய்தார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர். ஜயகொடி ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 12 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர். ஜயகொடி ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 12 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக இராணுவத் தளபதி சிலாபத்திற்கு விஜயம்
Lieutenant General Lasantha Rodrigo RSP ctf-ndu psc IG, Commander of the Sri Lanka Army, conducted a field visit to Chilaw on 10 December 2025 to inspect ongoing disaster relief efforts.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களின் நூல் வெளியீடு
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் எழுதிய "நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி - அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்" ("The Army Commander’s Promise to the Nation - I Shall Not Leave This War Behind to the Next Army Commander") என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நேற்று (டிசம்பர் 09) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.