செய்தி சிறப்பம்சங்கள்
9 வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் இலங்கை இராணுவம் தங்கப் பதக்கத்தை வென்றது
பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் இலங்கை இராணுவம் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்ததுடன் சர்வதேச இராணுவ ஈடுபாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இராணுவ தலைமையகத்தில் போர்வீரர் பயிற்சி திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு சொற்பொழிவு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் ஆர்.ஆர்.எம்.பீ.என்.பி பம்பரதெனிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணி வைத்தியசாலை நிலை-2க்கான 12 வது இலங்கை இராணுவ குழு இராணுவ தளபதிக்கு மரியாதை வழங்கல்
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 2026 பெப்ரவரி 20 அன்று புறப்பட இருக்கும் 12 வது இலங்கை இராணுவ குழுவினர் 2026 பெப்ரவரி 10 அன்று வேரஹெர இராணுவ வைத்திய படையணி தலைமையக மைதானத்தில், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, சம்பிரதாய மரியாதை அணிவகுப்பை வழங்கி படையினர் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முறையாக ஏற்றுக்கொண்டனர்.
இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை மரியாதை நிமித்தமாக சந்திப்பு
இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற புது தில்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அர்மாண்டோ பாலோ சிமி (கடற்படை அவர்கள் 2026 பெப்ரவரி 05 அன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஜி.எம்.என். செனவிரத்ன யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 05, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் எல்.எஸ்.டி.என். பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2026 பெப்ரவரி 05 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.
இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2025 இல் பிரகாசிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2026 ஜனவரி 26 முதல் 30 வரை ஹொரணை மாநகரசபை மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
78வது சுதந்திர தினத்தன்று 9158 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு
2026 பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி பாராட்டு
புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சி.டி.விக்ரமநாயக்க டப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 2026 பெப்ரவரி 03, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.