பட விவரணம்
பாதுகாப்பு செயலாளரை இராணுவ தளபதி சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (20) திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார்.
இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையில் அமைந்துள்ள இந்தியா ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ இன்று (18)ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
புதிய இராணுவ தளபதிக்கு பொறியியலாளர் படையணியினரின் அணிவகுப்பு மரியாதை

புதிய இராணுவத் தளபதிக்கு இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையானது பனாகொடையில் இராணுவத் தலைமையத்தில் வியாழக் கிழமை (13) இடம் பெற்றது.
புதிய இராணுவ தளபதிக்கு பிரதமரின் வாழ்த்துக்கள்

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கடமையேற்றதன் பின்பு புதன்கிழமை (12)ஆம் திகதி காலை அலரிமாளிகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்தார்.
புதிய இராணுவத் தளபதி மதிப்பிற்குறிய ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது இராணுவத் தளபதி பதவியினை பொறுப்பேற்றதன் நிமித்தம் செவ்வாய்க் கிழமை (11) திகதி காலை மேன்மைதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் சந்தித்தார்.
திறன்சாரந்த தொழில்துறை மிக்க இராணுவத்தை உருவாக்குவதாக புதிய இராணுவ தளபதி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இன்று (10) காலை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இராணுவ தலைமையகத்தில் உறையாற்றும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.
முதல் தடவையாக வெளிநாட்டு பிரதிநிதி புதிய இராணுவ தளபதியை சந்திப்பு

விடைபெற்றுச் செல்ல இருக்கும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் வெள்ளிக் கிழமை (07) திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை சந்தித்தார்.
22 ஆவது இராணுவத் தளபதி மத அனுஷ்டானங்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் என் யூ எம் எம் டபிள்யூ சேனாநாயக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி யூஎஸ்பி பிஎஸ்பி அவர்கள் இராணுவ கௌரவத்துடன் இராணுவத் தலைமையகத்தில் புதன் கிழமை (05) கடமைப் பொறுப்பேற்றதுடன் இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தனது இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வூ

இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் இன்று (04)ஆம் திகதி காலை நடைபெற்ற 21ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் வாழ்த்துக்கள் கூறி புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதி பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
யாழ்ப்பாண பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பாவனையில் இருந்த 54 ஏக்கர் இடம் குடியிருப்பாளர்களுக்கு பாரமளிப்பு

யாழ்ப்பாண மாவட்ட மக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் உட்பட தயிட்டி கிராம சேவகர் பிரிவிற்கு உரிய 54 ஏக்கர் இடம் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு திங்கட் கிழமை (03) திகதி வழங்கப்பட்டது.