13th March 2023 18:50:02 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 233 வது காலாட் பிரிகேடின் 6 வது கஜபா படையணியின் படையினர் மார்ச் 2 ஆம் திகதி மட்டக்களப்பு இரத்த வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாவலடியில் உள்ள 6 வது கஜபா படையணியின் வளாகத்தில் இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
இந்த திட்டத்தின் போது 23 வது காலாட் படைப்பிரிவு, 233 வது காலாட் பிரிகேட் மற்றும் 6 வது கஜபா படையணிகளைச் சேர்ந்த 80 படையினர் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 233 வது பிரிகேட் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 6 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஆர்எம்எல் ரத்நாயக்க அவர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார்.