பயிற்சி
ரோயல் ஆஸ்திரேலிய பொறியியல் நிறுவனத்தினால் இராணுவ பொறியியல் பாடசாலையில் எப்3 கண்ணிவெடி கண்டுபிடிப்பு பட்டறை
இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் 2025 செப்டெம்பர் 08 முதல் 11 வரை ரோயல் ஆஸ்திரேலிய பொறியியல் நிறுவனம் எப்3 கண்ணிவெடி கண்டுபிடிப்பு பட்டறையை நடாத்தியது.
போர் நீச்சல் பாடநெறி இல.12ன் பட்டமளிப்பு விழா
போர் நீச்சல் பாடநெறி இலக்கம் -12ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, 2025 செப்டம்பர் 06 அன்று நாயாறு விஷேட படையணி போர் நீச்சல் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது. போர் கருவி பணிப்பாளர் நாயகமும் விஷேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.டீ.ஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தினால் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் விழிப்புணர்வு விரிவுரை
இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தினால் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு விரிவுரை நடாத்தப்பட்டது.
இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை நிறைவு
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலை 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நிர்வாக உதவியாளர் பாடநெறி எண். 91 முதல் 95 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) சான்றிதழ்களை வழங்கியது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ‘திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்’ என்ற தலைப்பில் விரிவுரை
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் “திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்” என்ற தலைப்பில் விரிவுரை 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மூன்று நாள் மனநலப் பயிற்சி பட்டறை
‘படையினரின் உளவியல் ஆரோக்கியம் மற்றும் தற்கொலை முயற்சிகளைத் தடுத்தல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பட்டறை, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மெல்லிசை சிகிச்சை அமர்வு
தூய இலங்கை திட்டத்தின் கீழ், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மெல்லிசை சிகிச்சை நிகழ்ச்சித்திட்டம் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
வழக்கு ஆய்வு மூலம் தொழில்முறை இராணுவக் கல்வியை மேம்படுத்த தொப்பிகலவிற்கு பயிற்சி ஊழியர்கள் கள ஆய்வு விஜயம்
இடை நிலை அதிகாரிகளுக்கான செயற்பாட்டு நிலை இராணுவக் கல்வியை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இராணுவத் தளபதியின் மூலோபாய வழிகாட்டுதலின் கீழ், இராணுவ போர் கல்லூரியின் தளபதியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தொழில்முறை ரீதியாக கட்டமைக்கப்பட்ட பயிற்சி "பணியாளர் சவாரி" 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி நடாத்தப்பட்டது. கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி இப்பயிற்சியை ஒரு முன்மாதிரியான மட்டத்தில் ஏற்பாடு செய்வதில் தனது ஆதரவை வழங்கினார்.
பெலகாவி மித்ர சக்தி - 11 இன் இறுதி திட்டமிடல் கலந்துரையாடல்
மித்ர சக்தியின் - 11 பயிற்சிக்கான இறுதி திட்டமிடல் மாநாடு 2025 ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 02, வரை இந்தியாவின் கர்நாடகாவின் பெலகாவியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிஎஸ் ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ, மூன்று சிரேஷ்ட அதிகாரிகளுடன், இந்திய இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து வரவிருக்கும் பயிற்சிக்கான செயல்பாட்டு விவரங்களை கலந்துரையாடினார். பின்னர் பயிற்சி பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவத்தினரால் ரஷ்ய பிரதிநிதிகளுடன் மூன்றாவது திட்டமிடல் கலந்துரையாடல்
இலங்கை இராணுவம் ரஷ்ய-இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாய பயிற்சியின் மூன்றாவது திட்டமிடல் மாநாட்டை ரஷ்ய இராணுவ பிரதிநிதிகளுடன் 2025 ஓகஸ்ட் 05, அன்று காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தியது.