
இலங்கை இராணுவம், தூய இலங்கை பணிக்குழுவுடன் இணைந்து, 2025 ஜூலை 29 ஆம் திகதி "இராணுவத்துடன் சுத்தமான சுற்றுச்சூழல் - தேசத்திற்கு சுத்தமான கடற்கரை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கியது. மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.