பட விவரணம்

இலங்கை இராணுவம், தூய இலங்கை பணிக்குழுவுடன் இணைந்து, 2025 ஜூலை 29 ஆம் திகதி "இராணுவத்துடன் சுத்தமான சுற்றுச்சூழல் - தேசத்திற்கு சுத்தமான கடற்கரை" என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்கியது. மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.


பாகிஸ்தான் இராணுவத்தின் பொது பணிநிலை பிரதானி லெப்டினன் ஜெனரல் சையத் ஆமர் ராசா அவர்கள் உயர்மட்ட இராணுவக் குழுவுடன் 2025 ஜூலை 22 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


கண்டி ஸ்ரீ தலதா மாளிகையால் நடத்தப்படும் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெராவை ஒளிரச் செய்வதற்காக, இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக ஆறு தொன் உலர்ந்த தேங்காய்களை (கொப்பரை) 2025 ஜூலை 17 அன்று நன்கொடையாக வழங்கியது.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அவர்களை சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள், இலங்கை விமானப் படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, விமானப்படைத் தளபதி ஏயர் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூவீ ஆர்எஸ்பீ மற்றும் மூன்று பார்கள் யூஎஸ்பீ எப்என்டியூ (சீனா) பீஎஸ்சி கியூஎச்ஐ அவர்களை (ஜூலை 04, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தனது உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.


உலக சுற்றாடல் தினத்தைக் குறிக்கும் வகையில், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. அதன்படி, 2025 மே 30 முதல் ஜூன் 05, வரையிலான வாரம் சுற்றாடல் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


16 வது தேசிய போர்வீரர் தின நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை தேசிய போர்வீரர் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


16 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 மே 19 அன்று அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.