இராணுவத் தளபதியின் தலைமையில் நாடளாவிய ரீதியில் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

தற்போது நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இரவு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தலைமை தாங்கினார்.