
லெப்டினன் கேணல் டிஎம்சீஎல் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 01 அன்று சுருக்கமான நிகழ்வின் போது எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
லெப்டினன் கேணல் டிஎம்சீஎல் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 01 அன்று சுருக்கமான நிகழ்வின் போது எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண்.50 தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் 13 நவம்பர் 2024 முதல் 30 டிசம்பர் 2024 வரை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. 06 அதிகாரிகள் மற்றும் 28 சிப்பாய்கள் பாடநெறியை பின்பற்றினர்.
வெலிகந்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மகுல்பொகுண குளம் நிரம்பி வழிந்ததை தொடர்ந்து மகுல்பொகுண மற்றும் கலிங்கவிலவை இணைக்கும் வீதி பாரியளவில் சேதமடைந்திருந்தது. இந்த அனர்த்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், 23 வது காலாட் படைப்பிரிவினர், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினருடன் இணைந்து 2025 ஜனவரி 02 ம் திகதி விரைவான புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 01 ஜனவரி 2025 அன்று இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ கடமைகளை பொறுப்பேற்றார்.
2025-01-03
மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 31 டிசம்பர் 2024 அன்று இராணுவ தலைமையகத்தில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக முறையான நிகழ்வின் போது கடமை ஏற்றார்.
7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி மற்றும் 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர், 2024 டிசம்பர் 28 அன்று குளியாப்பிட்டிய, கிரிந்தாவ்வில் சிரேஷ்ட அதிகாராவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
56 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் வன்னி – 2024, வவுனியா கலாசார மண்டபத்தில் 29 டிசம்பர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றது.
புத்தல இராணுவ போர்க் கல்லூரி அதன் 3 வது ஆண்டு நிறைவு விழாவை 17 டிசம்பர் 2024 அன்று கொண்டாடியது.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமாலை யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 30 டிசம்பர் 2024 அன்று 511 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.