Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2024 19:33:23 Hours

இராணுவத் தளபதியினால் மாத்தளை எல்வள வித்தியாலய இசைக்குழுவிற்கு இசைக்கருவிகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கல்வி மற்றும் கலைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஜனவரி 16 அன்று மாத்தளை, உக்குவலையில் அமைந்துள்ள மாத்தளை எல்வள வித்தியாலயத்தின் மேற்கத்திய இசைக்குழுவிற்கு இசைக்கருவிகளை வழங்கினார். மாத்தளை எல்வல மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஏ.ஏ.பீ..கே கொடித்துவக்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தளபதி அலுவலகத்தில் விசேட நிகழ்வு இடம்பெற்றதுடன், அங்கு அதிபர் மற்றும் மாணவ குழுவுடன் ஆசிரியர் திரு ஈடிஎஸ்என் குணதுங்க, மேற்கத்தைய இசைக்குழு தலைவர் செல்வன் என்எச்பீஓ பவந்த, சிரேஷ்ட மாணவ தலைவன் எஸ்.டி. ஹெவாவிதாரண, பிரதித் சிரேஷ்ட மாணவ தலைவன் ஜி.பீ விதுரங்க குமார மற்றும் மாணவ தலைவன் செல்வன் தீக்ஷன பண்டார ஆகியோருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வு சிநேகபூர்வ கலந்துரையாடலுடன் இடம்பெற்றதுடன், இதன் போது இராணுவத் தளபதியும் மாணவர்களும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பாடசாலையின் இசை முயற்சிக்கு உதவும் விதமாக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மிகவும் தேவையுடைய இசைக்கருவிகளை மாத்தளை எல்வல மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. கேஏபிகேகே கொடித்துவக்கு அவர்களிடம் வழங்கியதுடன், மாணவர்களின் இசைக் கல்வியை மேம்படுத்துவதற்கு இராணுவத் தளபதி வழங்கிய நன்கொடையை பாராட்டி பாடசாலையின் சார்பாக அதிபர் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து இராணுவத் தளபதியினால் அதிபர் மற்றும் மாணவர்களுக்கு விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கியதுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந் நிகழ்வு இராணுவத் தலைமையகத்திற்கு அவர்களின் வருகை மற்றும் இசைத் துறையில் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடைபெற்றது.