10th January 2024 19:11:01 Hours
241 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து 06 ஜனவரி 2024 அன்று கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
இத்திட்டத்தினை 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ண ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் நெருக்கமாகக் கண்காணித்தார். பிரிகேடின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 5 அதிகாரிகள் மற்றும் 45 சிப்பாய்கள் மற்றும் அட்டாளைச்சேனை, அக்கரைபற்று மற்றும் ஆலியடிவேம்பு ஆகிய பிரதேச செயலகங்களின் பணியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.