26th December 2023 23:13:56 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் நோக்கில், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் பரிசுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா கேஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 21 டிசம்பர் 2023 அன்று நடைபெற்ற இத் திட்டத்தில் 40 சிவில் ஊழியர்கள் பரிசுப் பொதிகளை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி கலந்து கொண்டு சிவில் ஊழியர்களுக்கு உணவு பொதிகளை வழங்கியதுடன், அவர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.