10th December 2023 18:50:50 Hours
2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினருக்கு புதன்கிழமை (டிசம்பர் 06) பனாகொட இராணுவ வளாகத்தில் அமைந்துள்ள அவர்களது படையணி தலைமையகத்தில் ‘உளவியல்-சமூக அபிவிருத்தி’ பற்றிய செயலமர்வு நடைபெற்றது.
உளவியல் ஆலோசகர் திருமதி பாக்யா அபேசிங்க அவர்களினால் இச் செயலமர்வு நடாத்தப்பட்டதுடன், தலைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 10 அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.
திருமதி பாக்யா அபேசிங்க அவர்கள் படையணிக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரியினால் பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.