02nd November 2023 20:38:14 Hours
மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்கள் புதன்கிழமை (ஒக்டோபர் 25) தியத்தலாவ குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் புதிய தளபதியாக மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக பதவியேற்ற தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பணி நிலை அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அதன்பின் புதிய தளபதி அலுவலகத்தில் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட அழைக்கப்பட்டதுடன், புதிய தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். அங்கு அவர் எதிர்காலத்தில் பாடசாலைக்கான தனது திட்டங்களை வெளிப்படுத்தினார்.
இந் நிகழ்வின் போது குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் பணி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.