Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2023 21:30:01 Hours

நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் டப்ளியுஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.

பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகளின் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இடுவதன் மூலம் தனது கடமைகளை ஏற்றுகொண்டார். அவர் கஜபா படையணியின் பிரிகேடியர் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பின் இப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.