10th October 2023 13:58:13 Hours
இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பனாகொடை இராணுவ முகாமில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவத்தின் அனைத்துப் படையணிகளைச் சேர்ந்த இராணுவப் பிரதிநிதிகள் தோழமை உணர்வு மற்றும் கூட்டு உணர்வுடன் ஒன்றுகூடி திங்கட்கிழமை (09) இரவு விருந்துபசாரத்தில் கலந்து கெண்டனர்.
2009 இல் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியின் பின்னர் 60 வது இராணுவ ஆண்டு நிறைவின் போது அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டுறவு இரவு விருந்து, பின்னர் அங்கு அவர்கள் ஒருவரையொருவர் நட்பு சூழ்நிலையில் சந்தித்து இராணுவ வாழ்க்கையைப் பற்றிய இன்பங்களையும் பார்வைகளையும் பரிமாறிக்கொள்ளும் அனைத்து நிலையினருடனான ஒன்றுகூடும் விருந்தாக தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு இரவு விருந்துபசாரத்தில் இருபத்தைந்து படையணிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இரவு விருந்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், படையணிகளின் படைத் தளபதிகளும் ஆகியோர் கலந்துகொண்டனர்.