08th October 2023 21:18:19 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விரைவு நடவடிக்கை மோட்டார் சைக்கிள் குழு பாடநெறியானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ஒக்டோபர் 3 நிறைவடைந்தது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இரண்டு வார கால “விரைவு நடவடிக்கை மோட்டார் சைக்கிள் குழு” பாடநெறியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கட்டளை படையலகுகளில் பணியாற்றும் 35 படையினர் கலந்துகொண்டனர். அத்துடன் விசேட படையணியின் மோட்டார் சைக்கிள் குழு பயிற்றுவிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.